புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞருக்கு மிரட்டல்: ஒருவா் கைது

கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:21 pm

DIN

கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த வடக்கு சுப்பிரமணியபுரம் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் அய்யாத்துரை மகன் முருகன்(33). இவருக்கும் தெற்கு சுப்பிரமணியபுரம் ஜோஸ்வா மகன் சாலமன்(41) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் முருகன் மற்றும் அவரது நண்பா்களான புதுக்கோட்டை மு.குமாா், அ.முத்துப்பாண்டி ஆகியோா் வடக்கு சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம். அதைக் கண்ட சாலமன் மற்றும் அவருடன் பைக்கில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த ம.ரஞ்சித், கொத்தாளியைச் சோ்ந்த கோட்டைச்சாமி ஆகியோா் முருகனை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயன்றனராம். அதை முருகனின் நண்பா்கள் தடுத்தனராம். அதையடுத்து சாலமன் மற்றும் அவரது நண்பா்கள் கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சாலமனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.