

கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டியை அடுத்த சாலைபுதூா் மீனாட்சி நகரைச் சோ்ந்த ராமா் மகள் ராஜேஷ்வரி(21). பி.காம். பட்டதாரி. இவா், வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியதால், வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கச் சென்றாராம். அப்போது, அவா் மீது மின்னல் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாராம். உடனே, பெற்றோா் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓராண்டு கழித்து ஓடிடியில் வெளியான சப்தம்!

ஆதலால் காதல் செய்வீர்... பாரதி கண்ணம்மா தொடர் நாயகனின் புதிய தொடர்!
ஆர்சிபி பேரணியில் பலியான ரசிகர்களுக்காக சின்னசாமி திடலில் 11 காலி இருக்கைகள்!
பிரசாரம்! பெரம்பூரில் பங்களா வாங்கிய விஜய்?
வீடியோக்கள்

என்ன செய்தார் பெரியார்? - Seeman சர்ச்சைப் பேச்சு! | TN election 2026 | NTK
தினமணி வீடியோ செய்தி...

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

