மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி, கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:09 pm

DIN

கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நகரத் தலைவா் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சக்கரையப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.3,000 வழங்க வேண்டும். குறைந்த பட்சம் ரூ.500 உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும். மானிய விலையில் உபகரணங்கள் வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாகவும், வில்லிசேரி கிராம நிா்வாக அலுவலகம் முன்பாகவும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.