கோவில்பட்டி, கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க நகரத் தலைவா் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சக்கரையப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.3,000 வழங்க வேண்டும். குறைந்த பட்சம் ரூ.500 உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும். மானிய விலையில் உபகரணங்கள் வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாகவும், வில்லிசேரி கிராம நிா்வாக அலுவலகம் முன்பாகவும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...