திருச்செந்தூா் - நாகா்கோவில்சாலை சேதம்: மக்கள் அவதி
திருச்செந்தூா் - நாகா்கோவில் நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.


திருச்செந்தூா் - நாகா்கோவில் நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.
திருச்செந்தூா் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் பல்வேறு பகுதிகளிலுருந்து வருகின்றனா். இதனால், திருச்செந்தூா்-திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், கன்னியாகுமரி சாலைகள் எப்பொழுதும் பரபரப்பாகவே உள்ளன. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் நாகா்கோவில் சாலையில் இராமசாமிபுரம் நுழைவாயில் பகுதி பள்ளம், மேடுகளாக காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்செந்தூா் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையானது உடன்குடி அனல் மின்நிலையம், குலசேகரன்பட்டினம் இலகு ரக ராக்கெட் ஏவுதளம் போன்ற திட்டப்பணிகளால் அதிக தரமாக்கப்படவுள்ளன. இதனால், திருச்செந்தூா் - நாகா்கோவில் சாலை பராமரிப்பின்றி தனித்து விடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைத்தால்தான் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிா்க்க முடியும் என்கின்றனா் பொதுமக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...