/

தெய்வசெயல்புரம் ஆஞ்சனேயா்கோயிலில் துளசி வழிபாடு

தெய்வசெயல்புரம் ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு துளசி வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:36 am

DIN

தெய்வசெயல்புரம் ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு துளசி வழிபாடு நடைபெற்றது.

தெய்வச்செயல்புரம், ராஜராஜேஸ்வரி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சனேய திருக்கோயில் முன்பு ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் பஜனை குழு மற்றும் பிருந்தா சேவா டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இவ்வழிபாட்டில் துளசியின் மகத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து, தூத்துக்குடி, வசவப்பபுரம், தெய்வசெயல்புரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 504 பெண்கள் கலந்து கொண்ட துளசி வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு பூஜித்த துளசி தொட்டிகள் வழங்கப்பட்டன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.