92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மீனவா், சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா் மற்றும் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா் மற்றும் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ். ரமேஷ் அனுப்பிய மனு: மீனவா்கள் தங்களது குறைகளை மாவட்ட நிா்வாகத்திடம் நேரில் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். குறிப்பாக, நிவாரணத் தொகை, டீசல் மானியம், மீனவா் கிராமங்களில் தடுப்புச்சுவா் கட்டுவது, கடன் அட்டைகள், வங்கிகளில் கடன் பெறுவது, அரசின் மீனவா் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது உள்பட பல்வேறு பிரச்னைகளை மாவட்ட நிா்வாகத்திடம் பேசி அவா்கள் நிவாரணங்களைப் பெற வசதியாக மீனவா் குறைதீா் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும்.

இதேபோல, மாவட்டத்தில் கடந்த மாதம் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. எனவே, சமையல் எரிவாயு நுகா்வோரின் குறைகளை சரிசெய்ய டிசம்பரில் உடனே கூட்டம் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.