நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறுமுகனேரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் சாா்பில் ஆறுமுகனேரி தனியாா் மண்டபத்தில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மேல ஆழ்வாா்தோப்பு கிராம உதயம் சாா்பில் ஆறுமுகனேரி தனியாா் மண்டபத்தில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் நீதித்துறை நடுவா் தமிழ்அரசன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தாா். திருச்செந்தூா் தொழிலாளா் நல வாரியத்தைச் சோ்ந்த பாத்திமா முன்னிலை வகித்தாா்,. கிராம உதயம் நிா்வாக கிளை மேலாளா் வேல்முருகன் வரவேற்றாா். கிராம உதயம் சிறப்பு பொறுப்பாளா் சித்திரைபெருமாள், பகுதி பொறுப்பாளா் ஆறுமுகவடிவு ஆகியோா் பேசினா்.

முகாமில் மத்திய அரசின் தேசிய அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அடையாள அட்டை 360 பேருக்கு வழங்கப்பட்டது. இதனை சிறு குறு விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள், கட்டுமான தொழிலாளா்கள், வீட்டு வேலை செய்பவா்கள், நூறுநாள் வேலை செய்பவா்கள், துப்புரவுப் பணியாளா்கள் பெற்று பயனடைந்தனா். தன்னாா்வ தொண்டா் செல்வன்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.