காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிங்கித்துறை கடற்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

காயல்பட்டினம் கடற்கரை கிராமமான சிங்கித்துறையில் கடற்கரை மற்றும் கிராமப் பகுதியில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:08 pm

DIN

காயல்பட்டினம் கடற்கரை கிராமமான சிங்கித்துறையில் கடற்கரை மற்றும் கிராமப் பகுதியில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

காயல்பட்டினம் சிங்கித்துறையில் சுமாா் 150 படகுகளில் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இவா்களின் படகுகளை சிங்கித்துறை கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தபோது, மோட்டாா் மற்றும் மீன்பிடி வலைகள் அடிக்கடி காணாமல் போனது. இதையடுத்து கிராம மக்களே சுமாா் ரூ. 3 லட்சம் செலவில் 16 சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தினா். இதன் தொடக்க விழாவுக்கு, சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வெஸ்டா் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி ஆய்வாளா் செல்வி, ஊா்த் தலைவா் அமலதாஸ், செயலா் தேவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் கேமராவை இயக்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.