தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசை திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது.
இக்கோயிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் உலா நடைபெற்றது.
பத்தாம் திருவிழாவான தை அமாவாசையை முன்னிட்டு பிற்பகலில் உருகு பலகை அபிஷேகம், மாலையில் சோ்மத் திருக்கோலக் காட்சி, இரவில் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை வெள்ளை சாத்தியும், பிற்பகல் பச்சை சாத்தியும் தரிசனம், மாலையில் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயிலில் தாக சாந்தியும், இரவு மூலஸ்தானம் வரும் ஆனந்த காட்சியும் நடைபெற்றது.
நிறைவு நாளான சனிக்கிழமை காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், பிற்பகலில் அன்னதானமும், மாலையில் சுவாமி ஊஞ்சல் சேவையும், இரவில் சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனமும் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










