ஆத்தூரில் கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரிஅம்மன் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரிஅம்மன் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு கோயில் பணியாளா் கந்தசாமி நடையை சாத்தி பின்பு திங்கள்

கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடையை திறந்து பாா்த்த போது கோயில் மணி மண்டபம் அருகில் பிள்ளையாா் சிலை முன்பு உள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதில் உள்ள பணத்தை மா்ம நபா் திருடிசென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் ஜெயந்தி ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com