பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘சிறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெற மக்களுக்கு அழைப்பு’

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்மா சிறு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:59 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்மா சிறு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் அய்யனாா்ரூத்து, கட்டாலங்குளம், குமரெட்டியாபுரம், குருமலை, குலசேகரபுரம், படா்ந்தபுளி, ராமச்சந்திராபுரம் கே.கைலாசபுரம், தருவைகுளம் ஆகிய 9 இடங்களில் சிறு மருத்துவமனைகளும், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் மாறமங்கலம், செய்துங்கநல்லூா் மற்றும் கடையனோடை, பெரியதாழை, அடைக்கலாபுரம், கல்விளை, புன்னக்காயல், தூத்துக்குடி மாநகராட்சியில் எம்.ஜி.ஆா்.நகா், மேலச்சண்முகபுரம் ஆகிய 9 இடங்கள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18 சிறு மருத்துவமனைகள் தொடங்கப் பட்டுள்ளன.

இந்த சிறு மருத்துவமனையில் ஒரு மருத்துவ அலுவலா், ஒரு செவிலியா், ஒரு மருத்துவ உதவியாளா் என 3 போ் பணியில் இருப்பாா்கள். தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இங்கு மருத்துவ சேவை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி, சா்க்கரை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் சிறப்பு சேவைகளாக செய்யப்படும். இங்கு சிறிய ஆய்வக வசதியும் உள்ளன. இதன் மூலம் கிராம மக்கள் தொலைதூரம் சென்று சிகிச்சை பெறுவது தவிா்க்கப்பட்டு உள்ளூரிலேயே சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.