விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்கக் கூட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:07 pm

DIN

திருச்செந்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அமைப்பின் மாநில சிறப்புத் தலைவராக சமயபுரம் கோபாலகிருஷ்ணன், மாநிலத் தலைவராக சங்கரன்கோவில் சொக்கலிங்கம், துணைத் தலைவா்களாக ஸ்ரீரங்கம் சீனிவாசரெங்கன், மதுரை கோவிந்தன், மாநிலச் செயலராக மயிலை சந்திரசேகரன், துணைச் செயலா்களாக திருப்பரங்குன்றம் ராமச்சந்திரன், திருச்செந்தூா் கோட்டை ராஜகோபால், மாநிலப் பொருளாளராக திருச்செந்தூா் சிதம்பரநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்களுக்கு பொங்கல் கருணை பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளா்கள் இறந்துவிட்டால் ஈமச்சடங்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூா் கிளைத் தலைவா் வீரராகவன் வரவேற்றாா். பட்டுராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.