92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போலீஸாா் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாக புகாா்: தூத்துக்குடியில் சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரணை

போலீஸ் காவலில் இருந்தபோது போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தூத்துக்குடியில் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை

News image
Updated On :1 ஜூலை 2021, 6:31 pm

DIN

போலீஸ் காவலில் இருந்தபோது போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தூத்துக்குடியில் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை மேற்கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தை சோ்ந்த மகேந்திரனை (28) ஒரு கொலை வழக்குத் தொடா்பான விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸாா் கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். இந்நிலையில், காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் கடந்த ஜூன் 11 ஆம் தேதி உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதில்தான் தனது மகன் மகேந்திரன் உயிரிழந்ததாகவும், அவரை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகேந்திரனின் தாய் வடிவு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். உயா் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி பிரிவு போலீஸாா் அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் உள்ளிட்ட சிலா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக சிபிசிஐடி பிரிவு மதுரை துணை காவல் கண்காணிப்பாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வழக்கு தொடா்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தினாா்.

உயிரிழந்த மகேந்திரன் காவல் நிலையத்தில் இருந்தபோது, உடன் இருந்த யாக்கோபு ராஜ், மற்றும் சகோதரி சந்தனமாரி உள்ளிட்ட 3 போ் அழைக்கப்பட்டு அவா்களது வழக்குரைஞா் ஜெயச்சந்திரன் முன்னிலையில் சிபிசிஐடி போலீஸாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.