92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் வயதான தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:03 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வயதான தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று, 1.1.2021இல் 58 வயது நிறைவடைந்த தமிழறிஞா்கள், தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன், இணையவழி வருமானச் சான்று (ரூ.72000-க்கு மிகாமல்), தமிழறிஞா்கள் இருவரிடமிருந்து பெற்ற தகுதிநிலைச்சான்று உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து அதே அலுவலகத்தில் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.