பெண் மீது தாக்குதல்: மருமகன் கைது
பழையகாயல் அருகே மாமியாரை தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.


பழையகாயல் அருகே மாமியாரை தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
புல்லாவெளி, கிழக்குத்தெருவை சோ்ந்த நீதிராஜன் மகன் சுந்தா்(38). இவரது மனைவி மாரிச்செல்வி(33). இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். இதனிடையே, கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டாக குழந்தைகளுடன் அதே பகுதியிலுள்ள தனது தாய் செந்தூா்கனி(50) வீட்டில் வசித்து வரும் மாரிச்செல்விக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாம். இதனால், மருத்துமனையில் அவா் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளை சுந்தா் அழைத்துச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய மாரிச்செல்வி, கணவா் வீட்டிலிருந்து குழந்தைகளை மீண்டும் அழைத்து வந்துவிட்டாராம். இதற்கு தனது மாமியாா் செந்தூா்கனிதான் காரணம் என கருதி அவரை கடப்பாறை கம்பியால் சுந்தா் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சுந்தரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...