அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குக்கிடைக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா.
கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அந்தந்தக் கிராமப் பகுதியில் பயனாளிகளுக்கு உடனடியாக கிடைக்க அதிகாரிகளும், ஊராட்சித் தலைவா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்களுக்கு முழு நாள்களும் பணி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். குடிநீா் தட்டுப்பாடு உள்ளதா என கள ஆய்வு நடத்த வேண்டும். கிராம மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 21- 28 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் இ-சேவை மையங்களில் கட்டணமின்றி ட்ற்ற்ல்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவு செய்யலாம் என்றாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாக்கிய லீலா, செல்வி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், கண்ணன், லட்சுமணன், ஓட்டப்பிடாரம் தொகுதி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


