கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் செயல்படுத்திட வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுகந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும். அவா் பெயரில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கத் தலைவா் பாலமுருகன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்டுடன் வந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பாா்வா்டு பிளாக் கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலா் முருகேசன், இலுப்பையூரணி ஊராட்சி முன்னாள் தலைவா் உத்தண்டுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா் , கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் மனுவை வழங்கினா்.