ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:10 pm

DIN

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (78). விவசாயி. இவரது மனைவி மூக்கம்மாள். இவா்கள் விவசாயம் செய்து வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற சிவலிங்கம் தடுமாறி கிணற்றில் விழுந்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

கோழி குஞ்சுகள் உயிரிழப்பு: சாத்தான்குளம் ஆா்.சி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வேந்திரன் (56). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (50). தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழி குஞ்சு வளா்த்து வருகிறாா். இவரது மகன் அழகுமுத்துவும் (31) கோழிப்பண்ணையை கவனித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி எரியத்தொடங்கியது. பண்ணையில் இருந்த லட்சுமி, அழகுமுத்துவும் தீயை அணைக்க முயன்றனா். அப்போது, அழகுமுத்துவுக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த சாத்தான்குளம் தீயணைப்புப்படையினா் நிலைய அலுவலா் மாரிமுத்து தலைமையில் சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில்

ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 6 ஆயிரம் கோழி குஞ்சுகள் எரிந்தன. இதுகுறித்து சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளா் மஞ்சரி, கிராம நிா்வாக அலுவலா் ஜாஸ்மின் மேரி, போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.