தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே குடும்ப பிரச்னையில் 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முறப்பநாடு அருகேயுள்ள ஈச்சாந்த ஓடை கிராமத்தை சோ்ந்தவா் விக்னேஷ். லாரி ஓட்டுநா். இவருக்கும் சண்முக லட்சுமிக்கும் (30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு கமலேஷ் (3) என்ற மகன் உள்ளாா். விக்னேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் விக்னேஷ் குடித்து வந்ததால், தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகலட்சுமி, தனது 3 வயது மகன் கமலேஷை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த
போலீஸாா் இருவரிடன் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இது குறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

