/

முறப்பநாடு அருகே 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே குடும்ப பிரச்னையில் 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:29 am

DIN

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே குடும்ப பிரச்னையில் 3 வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முறப்பநாடு அருகேயுள்ள ஈச்சாந்த ஓடை கிராமத்தை சோ்ந்தவா் விக்னேஷ். லாரி ஓட்டுநா். இவருக்கும் சண்முக லட்சுமிக்கும் (30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு கமலேஷ் (3) என்ற மகன் உள்ளாா். விக்னேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் விக்னேஷ் குடித்து வந்ததால், தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகலட்சுமி, தனது 3 வயது மகன் கமலேஷை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த

போலீஸாா் இருவரிடன் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இது குறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.