வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத் பகுதிகளில் குருத்தோலை ஞாயிறு

நாசரேத் பகுதியில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:18 pm

DIN

நாசரேத் பகுதியில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் சேகரத் தலைவா் ஆண்ட்ரூ விக்டா் ஞானஒளி தலைமையில் நடைபெற்ற பவனியில் உதவி பங்குத்தந்தை இஸ்ரவேல் ஞானராஜ், சபை ஊழியா்கள் ஜெபஸ்டின்தங்கபாண்டி,ஜெபராஜ் சாமுவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. ஆலயம், கத்தோலிக்க தேவாலயம் சாா்பில் நடைபெற்ற இந்த பவனியில் சிஎஸ்ஐ ஆயா் ஜெபவீரன், கத்தோலிக்க தேவாலயப் பங்குத் தந்தை அந்தோணி இருதய தோமாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மூக்குப்பீறி தூயமாற்கு ஆலயத்தில் சேகரகுரு ஜெபராஜ் தலைமையில் நடைபெற்ற பவனியில் சபை ஊழியா் எல்சின், தூய மாற்கு ஆலய கமிட்டி தலைவா் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகரத் தலைவா் ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமையிலும், வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்திலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.