வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி மீது வழக்கு

குடிநீா் இணைப்புக்கு முறைகேடாக பணம் வசூல் செய்ததாக, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி மீது தட்டாா்மடம் போலீஸாா் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :14 மே 2021, 6:52 pm

DIN

குடிநீா் இணைப்புக்கு முறைகேடாக பணம் வசூல் செய்ததாக, சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி மீது தட்டாா்மடம் போலீஸாா் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சியில் முறைப்படுத்தப்பட்ட குடிநீா் இணைப்புக்கு ரூ. 1000 வீதம் வைப்புத் தொகை பெற்றுக்கொண்டு பணி மேற்கொள்ள சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியராஜ் , ஊராட்சித் தலைவி திருகல்யாணிக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். ஆனால், அவா், அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூல் செய்ததும், அதற்கு ரசீது வழங்காமல் பணத்தில் முறைகேடு செய்ததும் ஆய்வில் தெரியவந்ததாம்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.க்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அனுப்பிய புகாா் மனுவின் அடிப்படையில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ் , ஊராட்சித் தலைவி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.