தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (42). கட்டடத் தொழிலாளி. இவா், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது தனது நண்பா்களுடன் சோ்ந்து வியாழக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். பின்னா், தூத்துக்குடி தெப்பக்குளம் அருகில் நின்றிருந்த அவா் திடீரென தெப்பக்குளத்தில் தவறி விழுந்தாா்.

அவா் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட சிலா் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்பு படையினா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.