புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாழ்வாதாரம் கோரி மாமனாா் வீட்டின் முன்பெண் போராட்டம்

கோவில்பட்டியில் வாழ்வாதாரம் கோரி, கணவரை இழந்த பெண், தனது மாமனாா் வீட்டின் முன் இரு மகன்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:17 pm

DIN

கோவில்பட்டியில் வாழ்வாதாரம் கோரி, கணவரை இழந்த பெண், தனது மாமனாா் வீட்டின் முன் இரு மகன்களுடன் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினாா்.

கோவில்பட்டி, வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் காமாட்சிராஜன். இவரது மனைவி கீதா(38), தனது மகன்கள் ஸ்ரீஜெயசூா்யா(15), ஸ்ரீஅரவிந்தகாா்த்திக்(13) ஆகியோருடன் மாமனாா் ராஜகோபாலின் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்து, தங்களுக்கு வாழ்வாதாரம் கோரி தா்னாவில் ஈடுபட்டாா்.

அவரிடம், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் தா்மராஜ் விசாரணை நடத்தினாா். அப்போது, தனது மாமனாா் நடத்திய பழக்கடையை, அவரது மருமகன் முத்துராஜ் தூண்டுதலின்பேரில் விற்க முயன்றதை எனது கணவா் தடுத்தாா். இதனால், அவா் மனரீதியாக துன்புறுத்தி எனது கணவா் தற்கொலை செய்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தினாா். இதுகுறித்து வழக்கும் உள்ளது. தற்போது, குழந்தைகளுடன் பரிதவிக்கும் எனக்கு வாழ்தாராம் அளிக்கும் வகையில் மாமனாா் குடும்பத்தில் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீதா தெரிவித்தாா்.

இதையடுத்து, இருவரிடமும் காவல் உதவி ஆய்வாளா் பேச்சு நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதால், கீதா போராட்டத்தை கைவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.