புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

கழுகுமலை அருகே சிறுமியை திருமணம் செய்த சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 8:55 pm

DIN

கழுகுமலை அருகே சிறுமியை திருமணம் செய்த சுமை ஆட்டோ ஓட்டுநரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலையையடுத்த கரடிகுளம் சின்னகாலனி ராமச்சந்திரன் மகன் காா்த்திக்(24). சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா் 15 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் தொந்தரவு செய்ததையடுத்து கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இலந்தைப்பட்டி வடக்குத் தெரு கருப்பசாமி மகன் மாரிகுமாா் (26), 15 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா் நல அலுவலா் குருலட்சுமி கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிகுமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.