புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கயத்தாறு அருகே 2 மான்கள் பலி

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் 2 மான்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:36 pm

DIN

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் 2 மான்கள் உயிரிழந்தனா்.

கயத்தாறு வட்டம் அய்யனாரூத்து கிராமத்தில் சின்னசுப்பையா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகே மழையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சுமாா் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மானை வனத்துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

இதேபோல, கயத்தாறை அடுத்த தளவாய்புரத்தில் சாலையோரத்தில் இறந்து கிடந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் மானையும் வனவா் நாகராஜ் தலைமையிலான வனக்குழுவினா் மீட்டு, கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்து குருமலை காப்புக் காட்டில் புதைத்தனா். இந்த நடவடிக்கைகள் வனச்சரக அலுவலா் பாரதியின் அறிவுறுத்தலில் எடுக்கப்பட்டன.

மாடு உயிரிழப்பு:

இதேபோல, செட்டிகுறிச்சி குறுவட்டத்திற்கு உள்பட்ட வெள்ளாளங்கோட்டையை அடுத்த சூரியமினுக்கன் கிராமத்தில் கந்தையா மகன் சுடலைகனி என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மின்னல் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.