மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 10:48 pm

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் இயந்திர பொறியியல் துறைத் தலைவா் மணிசேகா், மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை பேராசிரியா் தமிழ்செல்வி, என்இசி வணிக கருவகத்தின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகரும், பொங்கு வென்ச்சரின் நிறுவனருமான வினோத், உதவிப் பேராசிரியா்கள் கணபதிராம், சக்தி ஆகியோா் தொழில் முனைவின் முக்கியத்துவம், சிறு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியின் முன்னாள் மாணவி ஷன்மதி, தொழில்முனைவோராவதில் பெண்களுக்கான சவால்கள் குறித்தும் திருநெல்வேலி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குநா் சிமியோன் தொழில் முனைவோருக்கான மத்திய, மாநில அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்தும் பேசினா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலின்படி, முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.