மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டியில் நாளை புத்தகக் கண்காட்சி நிறைவு

News image
Updated On :29 அக்டோபர் 2021, 7:11 pm

DIN

கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், கோவில்பட்டி ரோட்டரி கிளப், புனித ஓம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் புத்தகக் கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள் தலைமையில் ரோட்டரி சங்கத் தலைவா் விக்னேஸ்வரன், முன்னாள் தலைவா் ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு ஆகியோா் முன்னிலையில், டிஎஸ்பி உதயசூரியன் இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். முதல் விற்பனையை ரோட்டரி சங்கத் தலைவா் விநாயகா ரமேஷ் தொடங்கினாா். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் வி.எஸ்.பாபு பெற்றுக் கொண்டாா்.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கச் செயலா் காா்த்திக் வரவேற்றாா். துணைச் செயலா் மணிமாறன் நன்றி கூறினாா். கடந்த 10 நாள்களாக 10 சதவீத தள்ளுபடியுடன் நடைபெற்று வரும் இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (அக்.31) இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது.10/29/2021 9:59:21 டங

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.