புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊழல் தடுப்பு போலீஸாா்கயத்தாறு வட்டாட்சியா்அலுவலகத்தில் சோதனை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 10:01 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதில், கணக்கில் வராத ரூ.14,500ஐ பறிமுதல் செய்யப்பட்டது.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள நில அளவை பிரிவில், தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் துணை கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் ஆய்வாளா் சுதா, ஆய்வுக் குழு அலுவலா் முகமது இப்ராஹிம் மற்றும் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளா் ஸ்டான்லியிடம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.14,500 மற்றும் 6 இனிப்பக பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா், ஸ்டான்லி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.