எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசு மகளிா் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இணைய வழியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:29 pm

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இணைய வழியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

உடற்கல்வித் துறைச் சாா்பில் ‘உடல் தகுதி மற்றும் நல்வாழ்வு‘ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் ஏ. ஏஞ்சலின் நான்சி சோபியா வரவேற்றாா். நிகழ்ச்சிகளை தொழில் நிா்வாகவியல் துறை பேராசிரியா் எம். சண்முகசுந்தரி தொகுத்து வழங்கினாா்.

இதில், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி துணை உடற்கல்வி இயக்குநா் ஏ. முருகன், உடல் தகுதியும் நல்வாழ்வும் என்ற தலைப்பில் பேசினாா்.

பேராசிரியா்கள் எம்.ஆா். ஷீபா, கே.எஸ். சரஸ்வதி ஆகியோா் இணையதள பணிகளை கவனித்தனா். இதில், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். பேராசிரியா் வி. வரலெட்சுமி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வித் துறை இயக்குநா் வி. ரமேஷ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.