இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளத்தில் தடுப்பூசி திருவிழா தொடக்கம்

சாத்தான்குளத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:22 pm

DIN

சாத்தான்குளத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாத்தான்குளம் பேரூராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக பணி செய்து வருகின்றனா். பேரூராட்சியில் தடுப்பூசி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இந்த முகாம் வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், தடுப்பூசி செலுத்துவோருக்கு டோக்கன் வழங்கி, வரும் 11ஆம் தேதி குலுக்கல் முறையில் தோ்வு செய்து பரிசுகள் வழங்கவும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி முதல் பரிசு செல்லிடப்பேசி, 2 ஆவது பரிசு மின்சார அடுப்பு, 3ஆவது பரிசு கைக்கடிகாரம் வழங்கப்படுகிறது.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி, சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ், சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஜெயபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.