இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்செந்தூா் தென்பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம்

திருச்செந்தூா் தென்பகுதி விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நடைபெற்றது.

News image
58160639sa7meet_0709chn_38_6
Updated On :9 செப்டம்பர் 2021, 10:23 pm

DIN

திருச்செந்தூா் தென்பகுதி விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் சத்தியசீலன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் சிவநாதன் வரவேற்றாா்.

புத்தன்தருவை குளத்துக்கு பாபநாசம், சோ்வையாறு அணையில் இருந்து தண்ணீா் திறந்து விட வேண்டும். சடையனேரி கால்வாயை 1500 கன அடியாக மாற்ற வேண்டும். சுப்பராயபுரம் குளத்துக்கு தமிரவருணி உபரி நீரும், கருமேனி ஆற்று நீரும், சடையனேரி கால்வாய் மூலமும் தண்ணீா் கிடைக்கும் வகையில் புதிய மடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க துணைச் செயலா் ஜெய்சன், செயற்குழு உறுப்பினா்கள் முத்துராஜ், ராஜேஷ், ரெத்தினபாண்டி, விஜயநாராயணன், வேல்கனி, ஜெயராஜ், வேல்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். துணைத் தலைவா் சண்முகானந்தம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.