சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி பழுதால் பொதுமக்கள் அவதி
சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.


சாத்தான்குளம் ஆதாா் மையத்தில் கணினி இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதாா் பதிவு செய்யும் இயந்திரம் ஒரு யூனிட் மட்டுமே உள்ளது. இதனால் நாள்தோறும் சுமாா் 20 பேருக்கு மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
தற்போது அந்த இயந்திரமும் கடந்த ஒரு மாதமாக இயங்காமல் பழுதடைந்துள்ளது. இதனால் மக்கள் பலா் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அல்லது திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
எனவே இங்குள்ள ஆதாா் மையத்தில் பழுதடைந்து காணப்படும் கணினியை சீா் செய்து மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி கூறுகையில், தினமும் 50-க்கும் மேற்பட்டோா் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஒரு யூனிட் ஆதாா் கணினி இயந்திரம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...