இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் சப்பர பவனி

சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழாவில் 7ஆம் நாளான வியாழக்கிழமை சப்பரத்தில் பவனி நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 7:49 pm

DIN

சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழாவில் 7ஆம் நாளான வியாழக்கிழமை சப்பரத்தில் பவனி நடைபெற்றது.

இக்கோயில் கொடை விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் யானை கொடி பட்டம் சுமந்து ரத வீதி சுற்றி வந்து பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து தினமும் பல்வேறு வழிபாடுகளும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்று வந்தன. 7ஆம் திருநாளான வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து பவனி வந்ததும், அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள், இரவு 12 மணிக்கு புளியடி ஸ்ரீதேவி மாரியம்மன் சிங்க வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் சப்பரத்தில்எழுந்தருளி வீதி உலா வந்து வெள்ளிக்கிழமை காலை கோயில் வந்தடைந்தாா். 8ஆம்நாள் வெள்ளிக்கிழமை சுவாமி அக்னி சட்டி ஏந்தி வந்து ஆலய வளாகத்தில் பூக்குழி இறங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்தல் நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்குப்பூஜை, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி, டிரஸ்டிக் குழு மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.