இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கலை இலக்கிய போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வென்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:47 pm

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வென்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் துளிா் 2022 கலை இலக்கிய போட்டி, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் சுரேஷ்பாண்டி தலைமை வகித்தாா். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் நாயகம் (பசுவந்தனை), முனியசாமி (புதூா்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கி வைத்தனா். கட்டுரை, ஓவியம், பேச்சு, குழு நடனம், குழு பாடல், மாறுவேடப் போட்டி, அறிவியல் கண்காட்சி, பாரம்பரிய ஆடை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் சுதந்திர தின புறாக்களை பறக்கவிட்டாா்.

போட்டிகளில் வென்றோருக்கு மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினா் சக்திவேல்முருகன், நாகலாபுரம் அரசு கல்லூரி முதல்வா் சாந்தகுமாரி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சங்கரலிங்கம், மோகன், சங்கீதா, அருணாபேபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.