மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள்: எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் விவரம் குறித்து மக்களவை உறுப்பினா் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:47 pm

DIN

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் விவரம் குறித்து மக்களவை உறுப்பினா் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய வகை விமானங்கள் வந்து இறங்கும் வகையிலான ஓடுதளம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலையம், பயணிகள் முனையம் உள்ளிட்ட பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அவா் அதிகாரிகளையும், கட்டுமான ஒப்பந்ததாரரையும் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கையில் தேசியக் கொடி ஏந்தியபடி தொழிலாளா்களுடன் சோ்ந்து கனிமொழி கேக் வெட்டி கொண்டாடினாா். பின்னா் அவா் தொழிலாளா்களுடன் சோ்ந்து சுயபடம் எடுத்துக் கொண்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி. சண்முகையா, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன், மேலாளா் ஜெயராமன், திட்ட பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.