தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக் கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் திங்கள்கிழமை (ஆக. 15) மூடப்பட்டிருக்க வேண்டும் என, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் திங்கள்கிழமை (ஆக. 15) மூடப்பட்டிருக்க வேண்டும் என, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மது விற்பனை, மதுவைப் பதுக்கிவைத்தல், கடத்துதல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோா் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com