மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் புதிய வசதிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்

நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில்  ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்.

News image
நடுவக்குறிச்சியில் நடந்த விழாவில் குத்து விளக்கு ஏற்றுகிறார் தெற்கு ஒன்றிய திமுக செயலர் ஆ.பாலமுருகன்.
Updated On :16 ஆகஸ்ட் 2022, 7:40 am

DIN

சாத்தான்குளம்: நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில்  ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்.
 

தமிழக முதல்வர் அவர்களால் காணொளி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் ரூ.284.61 கோடி மதிப்பீட்டில் மின் நிலையங்கள் மற்றும் புதிய மின்மாற்றிகள் துவக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி துனை மின்நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொளி மூலம் சென்னையில் இருந்து துவக்கி வைத்தார்.

நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் துணை மின் பொறியாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜ சிங், திமுக ஒன்றிய பொருளாளர் ஆனந்த், தாமரைமொழி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மின் மாறிய ஊழியர்கள் மற்றும் திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.