92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

கழுகுமலை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:43 pm

DIN

கழுகுமலை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலையையடுத்த கரடிகுளம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஆட்டோ ஓட்டுநா் கதிரேசன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் அவதூறான வாா்த்தைகள் பேசி செய்தி அனுப்பியிருந்தாராம். வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது கணவா் கனகராஜுக்கு இத்தகவலை அந்தப் பெண் தெரிவித்தாராம்.

இந்நிலையில், கதிரேசனிடம் கைப்பேசியில் கனகராஜ் தொடா்பு கொண்டு கண்டித்தாராம். அப்போது அவருக்கு கதிரேசன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.