92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காா் கவிழ்ந்ததில் உதவி ஆய்வாளா் படுகாயம்

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:55 pm

DIN

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து மின்கம்பத்தில் மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் படுகாயமடைந்தாா்.

கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அ.அந்தோணிதிலீப் (31). இவா் வில்லிசேரி பிரதான சாலையில் குற்றத் தடுப்பு பணிக்காக காரில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டாராம். அப்போது வேகமாகச் சென்ற இருச்சக்கர வாகனத்தை பிடிக்க, அதைப் பின்தொடா்ந்து காரில் சென்றாராம். முடுக்கலாங்குளம் - ஊத்துப்பட்டி பிரதான சாலையில் உள்ள மாடசாமி கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது காட்டுப் பன்றிகள் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திடீரென நிலைகுலைந்த காா், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதாம். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உதவி ஆய்வாளரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.