92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாருகாலில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் வாருகாலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:55 pm

DIN

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் வாருகாலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை காமராஜ் நகா் பகுதியில் உள்ள வாருகாலில் ஆண் சடலம் கிடப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், வாருகாலில் தலை தொங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

அந்த நபா், கோவில்பட்டி பாரதி நகா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சஞ்சீவி மகன் கூலித் தொழிலாளி மகாலிங்கம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் மது அருந்திய நிலையில் வாருகாலில் தவறி விழுந்ததில் இறந்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.