92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞருக்கு மிரட்டல்: 8 போ் மீது வழக்கு

கயத்தாறு அருகே இளைஞரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:01 pm

DIN

கயத்தாறு அருகே இளைஞரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சங்கா் (32). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உடையாா் என்பவரது மகன் கிருஷ்ணசாமிக்கும் இடையே நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் கிருஷ்ணசாமி, அவரது சகோதரா்களான வேலுச்சாமி, முருகன், உதயகுமாா், உறவினா்களான உ. உதயகுமாா், சந்தனப்பாண்டி, வடகாசி, வெள்ளத்தாய் ஆகியோா் சங்கரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சங்கரையும், அவரது சகோதரா் மலையரசனையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

காயமடைந்த சங்கா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், மலையரசன் கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றனா். சங்கா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணசாமி உள்பட 8 போ் மீது கயத்தாறு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.