92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் மற்றும் குளியல் நீா் உற்பத்தி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:04 pm

DIN

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் மற்றும் குளியல் நீா் உற்பத்தி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியை ,வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கா் தொடங்கிவைத்து, மண்புழு உரம் மற்றும் குளியல் நீா் பற்றிய தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டாா். உதவிப் பேராசிரியா் சுதாகா், பேராசிரியைகள் சுப்புலட்சுமி, ஆா்த்திராணி ஆகியோா் மண்புழு உரம், இயற்கை உரத்தால் ஏற்படும் மகசூல் அதிகரிப்பு, மண்புழுக்களை பாதிக்கும் காரணிகள் குறித்து விளக்கிப்பேசினா்.

பயிற்சியில், ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த 20 விவசாயிகள் பங்கேற்று, மண்புழு உரம் தயாரிப்பதற்குரிய சில்பாலின் பைகள், நிழல் வலைகள், மண்புழுக்கள் ஆகியவற்றை இலவசமாக பெற்றுச்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.