92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தடுப்பூசி குறித்து அவதூறு: ரயில்வே ஊழியா் மீது வழக்கு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக ரயில்வே ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:46 pm

DIN

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக ரயில்வே ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

ஓட்டப்பிடாரம் வட்டம், எஸ்.கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியதால் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 23 வயது கா்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என, பெரம்பூா் ரயில் பெட்டி தொழிற்சாலை ஊழியரான, திருநெல்வேலி தாதனூத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சோ்மராஜ்பாண்டியன்(40) இணையதளத்தில் அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து மணியாச்சி துணை சுகாதார நிலைய கிராம நல செவிலியா் பவித்ரா அளித்த புகாரின் பேரில், மணியாச்சி போலீஸாா் சோ்மப்பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.