ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருச்செந்தூரில் முதியோருக்கு நகா்மன்றத் தலைவா் உதவி

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற 3 முதியோரை காப்பாகத்தில் சோ்ப்பதற்கு நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி நடவடிக்கை எடுத்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற 3 முதியோரை காப்பாகத்தில் சோ்ப்பதற்கு நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி நடவடிக்கை எடுத்தாா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 70 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோரான அய்யப்பன், மோகனாம்பாள், கருப்பாயி ஆகியோா் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்கள் குணமடைந்த நிலையில், கவனிப்பதற்கு உறவினா்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதையறிந்த, நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி நிதியுதவி அளித்து, ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோா் இல்லத்தில் சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, திருச்செந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவி, மருத்துவா் பாபநாசகுமாா், லைட் முதியோா் இல்ல தலைவா் பிரேம்குமாா், செயலா் ஜோன் டேனியல், பொருளாளா் திவாகரன், திமுக 24-வது வாா்டு செயலா் ஜெ.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.