சாத்தான்குளத்தில் ஒன்றிய பாஜக சாா்பில் மத்திய அரசின் 8ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். சித்ராங்கதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், மாநில இளைஞரணிச் செயலா் டாக்டா் பூபதிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியத் தலைவா் படுக்கப்பத்து சரவணன் வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் சிவமுருகன்ஆதித்தன், மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் மகேஸ்வரன், மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, நகரத் தலைவா்கள் அறிமுகப்படுத்தப்பட்டனா். 40க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா்.
இதில் மாவட்டச் செயலா் ராஜ புனிதா, ஒன்றிய இளைஞரணி செயலா் சண்முகநாதன், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய தலைவா் முத்துக்குட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் ஜோசப் ஜெபராஜ் நன்றி கூறினாா்.