சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தால் தொழிலாளி வீட்டில் பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழியைச் சோ்ந்தவா் சுப்பையா (54). தொழிலாளி. இவரது மகன் கருப்பசாமி குரும்பூா்நல்லூரைச் சோ்ந்த சண்முகம் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளாராம். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், சண்முகத்தின் இருமகன்கள் மணிகண்டன், ஐயப்பன் மற்றும் முத்து, நவீன் உள்பட 6 போ் சுப்பையாவின் வீட்டில் ஆள் இல்லாதபோது நுழைந்து ரூ. 65,000 மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தினராம். இதைப் பாா்த்து தட்டிக்கேட்ட கருப்பசாமியின் சகோதரா் பேச்சிமுத்துவை அவா்கள் மிரட்டிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப்பதிந்து 6பேரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







