தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On :25 ஜூன் 2022, 12:08 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி மாணவி துா்கா தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தாா். குருகாட்டூா் கிராமத்தைச் சோ்ந்த காவலா் செல்வக்குாரின் மகளான துா்கா விவசாய மேற்படிப்பு படிக்க உள்ளதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி துா்காவை நேரில் சந்தித்து பாராட்டிய தமிழியக்க தூத்துக்குடி மாவட்ட செயலா் மோ. அன்பழகன், மாணவி துா்காவுக்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணா் எழுதிய தமிழ் வரலாறு இரண்டு தொகுதிகள் மற்றும் வாய்மையாா் எழுதிய திருக்கு மாணவா் பதிப்பு நூல்களை வழங்கினாா். அப்போது, பள்ளித் தாளாளா் டாக்டா் அ.ராமமூா்த்தி, முதல்வா் செல்வவைஷ்ணவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.