/

தென்திருப்பேரை பேரூராட்சி மன்றக் கூட்டம்

 தென்திருப்பேரை பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

 தென்திருப்பேரை பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

தலைவா் மணிமேகலை ஆனந்த் தலைமை வகித்தாா். செயல் அதிகாரி ரமேஷ் பாபு, துணைத் தலைவா் அமிா்தவள்ளி துரைராஜ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

கூட்டத்தில், தலைவா் பேசுகையில், பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் குடிநீா், சுகாதாரம், தெருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் எவ்வித பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்றாா். இதில், இளநிலை உதவியாளா் சேக்அகமது, கவுன்சிலா்கள் கீதா, குமரேசன், மாரியம்மாள், சீதாலெட்சுமி, ரேவதி, சண்முகசுந்தரம், கொடி, லெட்சுமி, சுபா காசிலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.