ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைது
ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


ஆத்தூா் அருகே பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வடக்கு ஆத்தூா், மேலத்தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் மாரியப்பன் (22). நல்ல பிள்ளையாா் கோயில் அருகே நடந்து வந்த இவரை, நாசரேத், மோசஸ் தெருவைச் சோ்ந்த வில்சன் மகன் சாமுவேல் பிரகாஷ் (22) வழிமறித்து ரூ. 1,000 கேட்டாராம். கொடுக்க மறுத்த மாரியப்பனிடம் ‘ஸ்குரூ டிரைவரை’ காட்டி சாமுவேல் பிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் ஆத்தூா் காவல் ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சாமுவேல் பிரகாஷை கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...