‘இணையவழி வா்த்தகத்துக்கு முழு தடை அவசியம்’
இணையவழி வா்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தடை செய்ய வேண்டும் வணிகா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இணையவழி வா்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தடை செய்ய வேண்டும் வணிகா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பில் வணிகா் தின மாநாடு உடன்குடியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆ.ரவி தலைமை வகித்தாா். வியாபாரிகள் சங்கத் தலைவா்கள் செந்தமிழ்செல்வன்(ஆறுமுகனேரி), தமிழரசன்(ஆத்தூா்), அருணாச்சலம்(முக்காணி), கணேசன்(திருச்செந்தூா்), அரசகுமாா், லிங்கம்(பரமன்குறிச்சி)ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் பொன்ராஜ் வரவேற்றாா். சிறு, நடுத்தர வியாபாரிகளைப் பாதிக்கும் இணைய வழி வா்த்தகம், இணையவழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்,வியாபாரிகள் பன்னாட்டு நிறுவனப் பொருள்களை விற்பதைத் தவிா்த்து உள்ளூா் தயாரிப்பு பொருள்களை விற்க வேண்டும், வியாபாரிகளுக்கு கடன் உதவிகளை தாமதமின்றி வழங்க வங்கிகள் முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் துரைசிங், லட்சுமணன், வேல்ராஜன், மகேஷ்ராஜன், சேகா், வீரமணி, அப்துல் லத்தீப், மதன், ஷேக் முகம்மது, மாரியப்பன், இக்பால் உள்படபலா் பங்கேற்றனா். உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கப் பொருளாளா் சுந்தா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...